Monday, August 18, 2008

காதலிக்கும் போது....

என் வேதனைகளை
எதில் கொட்டுவது என்று தெரியாமல்
கவிதைகளாய் கிறுக்கித் தள்ளுகிறேன்….
என் கண்ணீரை என்ன செய்வது!?…

விழி எனும் குளம்
தன் கரைகளை
உடைத்துக் கொள்ளும் போதெல்லாம்
தலையணை மட்டுமே
துணையாகிப் போகிறது!…

பேதை எனக்கு
மெளனமாய் அழத் தான் தெரிகிறது!...
என் மனதை உனக்குப்
புரிய வைக்கத் தெரியவில்லையே!!!

நான் அப்படி என்ன பாவம் செய்தேன்!?...
இப்படி என்னைக் கதற வைக்கிறாயே…

உன்னை உண்மையாய் நேசித்தது பாவமா?...
உன் மீது உயிரையே வைத்தது பாவமா?...
நீ வார்த்தைகளால் கடித்துக் குதறும் போதும்
உன்னை வெறுக்கத் தெரியாதது பாவமா?...
மனக் காயத்தின் வலிகளை மீறி
உனது நினைவுகள் விஸ்வரூபம் எடுப்பது பாவமா?...
எதுடா நான் செய்த பாவம்?????

இதயத்தை உன் புன்னகைகள் தான்
மலர வைத்தது!…
மலர்ந்த என் இதயத்தை
உன் வார்த்தைகள் இன்று எரிக்கின்றது!

என்னுள்ளே கொளுந்துவிட்டெரியும்
உனது நினைவுகளை
அணைக்கும் வழி தெரிந்தும்
அணைக்க மனமில்லாமல் நான்!….

மூடிய இமைகளுக்குள் தோன்றி
முறுவலித்தே வதைக்கிறாய் நீ!...

காதலிக்கவே கூடாது என்று இருந்த என்னை
உன் புன்னகைகள் கலைத்தது!...
நான் வளர்த்த காதலை
உன் வார்த்தைகள் கலைக்க சொல்கிறது!!!…
என்னடா நியாயம் இது!!!???

கொஞ்ச நாட்களாய்
தொண்டையில் சிக்குகிறது உணவு!..
பதறுகிறாள் அம்மா!…
என்னவென்று சொல்வேன் நான்!?

கனவுகள் கலைந்து விடும் என்று
காணும் போது தெரிவதில்லை!…
அதே போல
காணும் கனவுகளோடு சேர்ந்து
வாழ்க்கையும் கலைந்து விடும் என்று
காதலிக்கும் போது தெரிவதில்லை!!!

No comments: