
வலி தான்!
உன் முகம் பார்க்கையில்!…
உன் பெயர் கேட்கையில்!…
உன் புன்னகையை ரசிக்கையில்!...
என்ன வலித்த போதும்
என் மனம் தேடுவதெல்லாம்
உன்னை மட்டும் தான்!
உன்னைப் பார்க்கக் கூடாது
என்று தான் இருப்பேன்...
இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக் கொண்டு!...
ஆனால்
நினைவுகளின் கண்கள்
அகலத் திறந்து கொள்கின்றனவே…
வார்த்தைகளால் காயப் படுத்தினாய்!...
இதயம் இமை மூடிக் கதறுகிறது!
கலங்கும் கண்களை
யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…
விம்மும் நெஞ்சை அழுத்திக் கொண்டு…
அடிக்கடி உளறிக் கொட்டி விடும் வார்த்தைகளை
சமாளித்துக் கொண்டு…
எத்தனை நாள் தான் இருக்க முடியும்!!??...
புதையல் எனப் பொத்தி வைத்த நினைவுகள்
விஷமாகித் தாக்கியதில்
மூச்சுக் காற்றுக்குத் தடுமாறுகிறது இதயம்!...
நிகழ்காலம்
கானலாய்ப் போனதில்…
என் எதிர்காலம்
மாயத் தோற்றமாய் மிரட்டுகிறது!
No comments:
Post a Comment