Monday, August 18, 2008

(என்)அவன்!

நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை
அழகாய்க் கோதிக் கொள்வாய்!...
கோதும் கை பிடித்து நடக்க
ஆசை நெஞ்சை முட்டும்!

அழகாய்த் தான் சிரிப்பாய்!...
ஏனோ எரிச்சலாய் இருக்கும்…
என்னைப் போலவே
எல்லோரும் ரசிப்பார்களே என்று!

இடது கையில் நகம் கடிப்பாய்!...
என்னைப் போலவே!
எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா!?...

அன்று பார்த்தாயே…
ஒற்றைப் புருவம் உயர்த்தி!
நீ என்ன நினைத்துப் பார்த்தாயோ…
நான் பற்றி எரிந்தது உண்மை!

தெரிந்தே
வில(க்)கிச் செல்வாய்!...
வலித்த போதும்
ரசிப்பேன்!

குழந்தை ஒன்றை முத்தமிட்டாய்!
ஏனோ என் கன்னம் சிவந்து போனது!…
கண்ணை மூடி அந்தக் குழந்தையாய்
என்னைக் கற்பனை செய்ததாலா!?...

வார்த்தைகளாய்
காயம் செய்வாய்!...
விசித்திரமான வகையில்
இனிக்கும்!

அலட்சியமாய்
திருப்பிக் கொள்வாய்!...
என் உதடுகள்
எனையறியாமல் புன்னகைக்கும்!

எனக்குப் பிடித்த கருப்பு உடையில்
காற்று கேசம் கலைக்க
மந்தகாசப் புன்னகையுடன் நின்றாயே ஒரு நாள்!…

சத்தியமாய் சொல்கிறேன்!…

உயிரே…
உன்னை மறப்பது
மரணத்திலும் முடியாதுடா!!!!!…

No comments: