Monday, December 15, 2008

முதல் முத்தம்!



வானம்
சந்தோஷத்தில்
மழைத் தாரைகளை
வாரியிறைத்துக் கொண்டிருந்தது!

உச்சி விழுந்த துளிகள்
உடல் நனைத்தத்தில்
உயிர் வரை
நடுங்கிக் கொண்டிருந்தேன்!

திடீரென்று
மண்வாசனையை மீறய
உன் வாசனை உணர்ந்து
திரும்பிப் பார்த்தால்
என் அருகாமையில் நீ!

ஒரு நொடி
நின்று துடித்தது
என் இதயம்!

இமைக்க மறந்து
உன்னை நான் பார்த்த போது
“இனியவளே!” என்றழைத்து
நெருங்கி வந்தாய்!

எலும்பை உடுருவும்
அந்தக் குளிரில்
உன் வெப்பம் தேடி
உள்ளம் அலை பாய
உதட்டைக் கடித்து
என்னை அடக்கிக் கொண்டேன்!

என் நிலை கண்டு
லேசாய் முறுவலித்தாய்!.....

கன்னங்கள் சிவந்து போனது!...
“முகத்தின் வழி
என் உள்ளம் கண்டு கொண்டாயோ!?...” என்று

மீண்டும் நெருங்கி வந்து
இடை வளைத்து – என்
இதழ் அணைத்தாய்!...

முதல் ஸ்பரிசம்! – உன்
முதல் முத்தம்!

விலக்கத் தோன்றவில்லை!...
விலக்கவும் முடியவில்லை!

உன் அணைப்பில்
உலகம் மறந்து நின்றேன்!

எவ்வளவு நேரம்
அப்படிக் கழிந்ததோ!?...

அந்த மோகன நிலைக்குள்ளும்
யாரோ அழைத்தது போல் தோன்ற…
மூடி இருந்த இமைகளை
பிரித்து பார்த்தேன்!

உடல் நனைத்த
மழை இல்லை!...

இதழ் அணைத்த
நீயும் இல்லை!...

நான் எப்படி
என் அறையில்!?

அட…
அனைத்தும்கனவு தானா!?...

எப்படி!?...

மறந்து விடச் சொன்னாய்!...

என் நாட்குறிப்பேட்டில் இருந்து
உன்னை பற்றிய குறிப்புக்களை
அழித்து விட்டேன்!

எனது நாட்களில் இருந்து
உனக்காக
நான் ஒதுக்கிய நிமிடங்களை
நீக்கி விட்டேன்!

உனது கடிதங்கள்…
உனது புகைப் படங்கள்!…
உனது கவிதைகள்!…
அனைத்தையும் எரித்து விட்டேன்!
ம்....
மன ஏட்டில் இருந்தும் கூட
உன்னை நீக்குவதற்கு
முயற்சிகள் நடக்கிறது!…
ஆனால்....
நானே உன்னைப் பற்றிய
நினைவாகும் போது
என்ன செய்து என்ன!?...
மறப்பது எப்படி சாத்தியமாகும்!?......

நீ அழைத்த என் பெயர்!…
நீ ரசித்த என் புன்னகை!…
நீ தீண்டிய என் விரல்கள்!…
நீ கோதிய என் கூந்தல்!...
நீ முத்தமிட்ட என் இதழ்கள்!…
நீ நேசித்ததாய் சொன்ன என் இதயம்!...

இப்படி – "என்"
அனைத்திலும்
நீ!…
நீ!…
நீ மட்டும் தானேடா
இருக்கிறாய்!

பின் எப்படியடா
உன்னை நான் மறக்க முடியும்!?......

ஏதோ!.........

விழிகளின் வழி புகுந்த
மின்னல் ஒன்று
என் உள்ளத்தை
லேசாய் வருடிச் சென்றது!

இரண்டே இரண்டு நொடிகள் தான்
உன்னை நான் பார்த்தது!...

அதற்குள்ளாக
என் இதயத்துள் நுழைந்து விட்டாயா???

அதிசயம் தான்!...

எதுவுமே தெரியாது!...
உன் பெயர்…
உன் வயது…
உன் ஊர்...

நீ தமிழன்
என்பதைத் தவிர!

என்ன நடக்கிறது
எனக்குள்!?

யாரடா நீ!?
என்னுள் இவ்வளவு மாற்றம் தருகிறாயே!...
உன் முகத்தைக் கூட
முழுதாய் பார்க்கவில்லை!...
ஆனா போதும் மனதில் ஏதோ ஓர் உயிர்ப்பு!...

இதன் பெயர் என்ன?....
முடிவாய் சொல்லுவதற்கு
எனக்கு என் மனம்
இன்னமும் புரியவில்லை….

ஆனாலும் ஏதோ...
இனம் புரியாத ஏதோ ஒன்று!..............

காதலிக்கும் போது!...

கண்களில் விழும் போது
கனவுகள் பிறக்கும்!

ஜாடை பேசும் போது
யாவும் புதிதாய்த் தோன்றும்!

இதயத்துள் நுழையும் போது
இனிமை வரும்!

திருட்டுப் பார்வைகளின் போது - வெட்கம்
தாவி வந்து கட்டிக் கொள்ளும்!

சீண்டிப் பார்க்கும் போது - சினந்தாலும்
சிரித்துக் கொள்ளத் தோன்றும்!

உயிரில் கலக்கும் போது
உணர்வுகள் பூப் பூக்கும்!



இதழ் சுளிக்கும் போது
இதயம் வலிக்கும்!

முகம் திருப்பும் போது
மனம் உடையும்!

தெரிந்தே விலகும் போது – அனைத்தும்
தெவிட்டிப் போகும்!

பேச்சை நிறுத்தும் போது - தூக்கம்
பறந்து போகும்!

முழுதாய் முறிக்கும் போதோ – வாழ்க்கையே
முழ்கிப் போய் விடும்!