
வானம்
சந்தோஷத்தில்
மழைத் தாரைகளை
வாரியிறைத்துக் கொண்டிருந்தது!
உச்சி விழுந்த துளிகள்
உடல் நனைத்தத்தில்
உயிர் வரை
நடுங்கிக் கொண்டிருந்தேன்!
திடீரென்று
மண்வாசனையை மீறய
உன் வாசனை உணர்ந்து
திரும்பிப் பார்த்தால்
என் அருகாமையில் நீ!
ஒரு நொடி
நின்று துடித்தது
என் இதயம்!
இமைக்க மறந்து
உன்னை நான் பார்த்த போது
“இனியவளே!” என்றழைத்து
நெருங்கி வந்தாய்!
எலும்பை உடுருவும்
அந்தக் குளிரில்
உன் வெப்பம் தேடி
உள்ளம் அலை பாய
உதட்டைக் கடித்து
என்னை அடக்கிக் கொண்டேன்!
என் நிலை கண்டு
லேசாய் முறுவலித்தாய்!.....
கன்னங்கள் சிவந்து போனது!...
“முகத்தின் வழி
என் உள்ளம் கண்டு கொண்டாயோ!?...” என்று
மீண்டும் நெருங்கி வந்து
இடை வளைத்து – என்
இதழ் அணைத்தாய்!...
முதல் ஸ்பரிசம்! – உன்
முதல் முத்தம்!
விலக்கத் தோன்றவில்லை!...
விலக்கவும் முடியவில்லை!
உன் அணைப்பில்
உலகம் மறந்து நின்றேன்!
எவ்வளவு நேரம்
அப்படிக் கழிந்ததோ!?...
அந்த மோகன நிலைக்குள்ளும்
யாரோ அழைத்தது போல் தோன்ற…
மூடி இருந்த இமைகளை
பிரித்து பார்த்தேன்!
உடல் நனைத்த
மழை இல்லை!...
இதழ் அணைத்த
நீயும் இல்லை!...
நான் எப்படி
என் அறையில்!?
அட…
அனைத்தும்கனவு தானா!?...
No comments:
Post a Comment