Monday, December 15, 2008

எப்படி!?...

மறந்து விடச் சொன்னாய்!...

என் நாட்குறிப்பேட்டில் இருந்து
உன்னை பற்றிய குறிப்புக்களை
அழித்து விட்டேன்!

எனது நாட்களில் இருந்து
உனக்காக
நான் ஒதுக்கிய நிமிடங்களை
நீக்கி விட்டேன்!

உனது கடிதங்கள்…
உனது புகைப் படங்கள்!…
உனது கவிதைகள்!…
அனைத்தையும் எரித்து விட்டேன்!
ம்....
மன ஏட்டில் இருந்தும் கூட
உன்னை நீக்குவதற்கு
முயற்சிகள் நடக்கிறது!…
ஆனால்....
நானே உன்னைப் பற்றிய
நினைவாகும் போது
என்ன செய்து என்ன!?...
மறப்பது எப்படி சாத்தியமாகும்!?......

நீ அழைத்த என் பெயர்!…
நீ ரசித்த என் புன்னகை!…
நீ தீண்டிய என் விரல்கள்!…
நீ கோதிய என் கூந்தல்!...
நீ முத்தமிட்ட என் இதழ்கள்!…
நீ நேசித்ததாய் சொன்ன என் இதயம்!...

இப்படி – "என்"
அனைத்திலும்
நீ!…
நீ!…
நீ மட்டும் தானேடா
இருக்கிறாய்!

பின் எப்படியடா
உன்னை நான் மறக்க முடியும்!?......

No comments: