கண்களில் விழும் போதுகனவுகள் பிறக்கும்!
ஜாடை பேசும் போது
யாவும் புதிதாய்த் தோன்றும்!
இதயத்துள் நுழையும் போது
இனிமை வரும்!
திருட்டுப் பார்வைகளின் போது - வெட்கம்
தாவி வந்து கட்டிக் கொள்ளும்!
சீண்டிப் பார்க்கும் போது - சினந்தாலும்
சிரித்துக் கொள்ளத் தோன்றும்!
உயிரில் கலக்கும் போது
உணர்வுகள் பூப் பூக்கும்!
இதழ் சுளிக்கும் போது
இதயம் வலிக்கும்!
முகம் திருப்பும் போது
மனம் உடையும்!
தெரிந்தே விலகும் போது – அனைத்தும்
தெவிட்டிப் போகும்!
பேச்சை நிறுத்தும் போது - தூக்கம்
பறந்து போகும்!
முழுதாய் முறிக்கும் போதோ – வாழ்க்கையே
முழ்கிப் போய் விடும்!
No comments:
Post a Comment