Monday, December 15, 2008

காதலிக்கும் போது!...

கண்களில் விழும் போது
கனவுகள் பிறக்கும்!

ஜாடை பேசும் போது
யாவும் புதிதாய்த் தோன்றும்!

இதயத்துள் நுழையும் போது
இனிமை வரும்!

திருட்டுப் பார்வைகளின் போது - வெட்கம்
தாவி வந்து கட்டிக் கொள்ளும்!

சீண்டிப் பார்க்கும் போது - சினந்தாலும்
சிரித்துக் கொள்ளத் தோன்றும்!

உயிரில் கலக்கும் போது
உணர்வுகள் பூப் பூக்கும்!



இதழ் சுளிக்கும் போது
இதயம் வலிக்கும்!

முகம் திருப்பும் போது
மனம் உடையும்!

தெரிந்தே விலகும் போது – அனைத்தும்
தெவிட்டிப் போகும்!

பேச்சை நிறுத்தும் போது - தூக்கம்
பறந்து போகும்!

முழுதாய் முறிக்கும் போதோ – வாழ்க்கையே
முழ்கிப் போய் விடும்!

No comments: