விழிகளின் வழி புகுந்த
மின்னல் ஒன்று
என் உள்ளத்தை
லேசாய் வருடிச் சென்றது!
இரண்டே இரண்டு நொடிகள் தான்
உன்னை நான் பார்த்தது!...
அதற்குள்ளாக
என் இதயத்துள் நுழைந்து விட்டாயா???
அதிசயம் தான்!...
எதுவுமே தெரியாது!...
உன் பெயர்…
உன் வயது…
உன் ஊர்...
நீ தமிழன்
என்பதைத் தவிர!
என்ன நடக்கிறது
எனக்குள்!?
யாரடா நீ!?
என்னுள் இவ்வளவு மாற்றம் தருகிறாயே!...
உன் முகத்தைக் கூட
முழுதாய் பார்க்கவில்லை!...
ஆனா போதும் மனதில் ஏதோ ஓர் உயிர்ப்பு!...
இதன் பெயர் என்ன?....
முடிவாய் சொல்லுவதற்கு
எனக்கு என் மனம்
இன்னமும் புரியவில்லை….
ஆனாலும் ஏதோ...
இனம் புரியாத ஏதோ ஒன்று!..............
No comments:
Post a Comment