உன்னை நான் நேசிக்கிறேனா?
புரியவில்லையே....
உன்னுடன் போட்ட சண்டையும்!...
உன்னைத் திட்டிய பேச்சுக்களும்!...
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏற்பட்ட கோபங்களும்!...
இப்போது காதலாய் மாறிவிட்டதா????
நம்ப முடியவில்லையே........
அடிக்கடி கண்கள்
உன்னைத் தேடுகிறது!
நீ என்னையே பார்ப்பதாய்
இதயம் நினைத்துக் கொள்கிறது!
நீ எதிரினில் வரும் போதெல்லாம்
இறக்கை முழைத்த உணர்வு!
ஏனடா?
ஏனடா இப்படி மாறிப் போனேன்???
புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்!
என்ன முயன்றும்
அதைப் புரிந்து கொள்ளவே
முடியவில்லை!!!
இந்த உணர்விற்கு
என்ன பெயர் சூட்டுவது
என்றும் தெரியவில்லை!!!!
இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்!...
அதன் பின் உன்னை நான்
பார்ப்பேனா என்று கூடத் தெரியாது!
இப்போது எதற்காக இந்த உணர்வு????
Friday, June 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment