நான் வடிக்கும் கவிதைகளில்
என்றென்றும் நீ இருப்பாய்!
ஏனெனில் உன்னை அறிந்த பின்பே
காதல் என்னும் உலகத்தில்
நான் புகுந்தேன்....
என் சிந்தையில் கலந்த
உன் உணர்வுகளும்
கற்பனைகளுமே
கவிதைகளாயின....
என்னை விட்டு
நீ விலகும் போதெல்லாம்
நான் மரணத்தின் வாசலில்
இருப்பதை உணர்கின்றேன்!...
நான் எதிர்காலத்தில்
பூத்துக் குலுங்கும்
சேலையென நினைத்தேன்!...
ஆனால் நிகழ்காலத்தில் உதிரும்
பூவாகி விட்டேன்!
சிப்பி அழிந்தாலும்
முத்து அழியாது!...
நான் மறைந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்றும் அழியாது!
என் இதயம் என்றென்றும்
உனக்கு சொந்தமே...
உன் நினைவுகளிலே
என் வாழ்க்கை....
வாடாத என் கவிதைகள்
கூற வேண்டும் உன்னிடத்தில்...
கலையாத என் கனவுகளை!!!
Saturday, June 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment