சிந்திய சிரிப்புகளையெல்லாம்
சேமித்து வைத்திருந்தேன்!.....
இரண்டு வருட சேமிப்பை
எடுத்துப் பார்க்கிறேன்.....
எதிலுமே என் பெயரில்லை!....
என் பக்கத்தில் நின்றவர்களைப்
பார்த்து சிரித்தது பல....
என் முன் நின்றவர்களுக்காய் சில....
பின் நின்றவர்களுக்காய் சில.....
எவரையோ எண்ணியபடி
எனைப் பார்த்து
சிந்தியவை சில........
எல்லாவற்றையும் கழித்த போது
எஞ்சியவை எனக்காக
சில ஏளனப் புன்னகைகள்.......
என் மனக்காயங்களுக்கு-அவை
மருந்தா இல்லை
திராவகமா தெரியவில்லை!
ஆனாலும் அள்ளி அள்ளிப்
பூசிக்கொள்கிறேன்......
இதயத்தில் உன் பெயரையும்....
உயிரில் உன் முகவரியையும்.....
சுமந்தபடி!...
Saturday, June 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment