ஒரு மழைக்காலத்திற்கு
முன்னதாக
நிகழ்ந்திருந்தது நம் சந்திப்பு!
கள்ளங் கபடமில்லாத
சின்ன சின்ன உணர்வுகளை கொண்டு
கடற்கரையோரத்தில்
மணல் வீடு கட்டும்
இரண்டு குழந்தைகளாய்
மிக மெதுவாய் கட்ட ஆரம்பித்தோம்...
நம்மிடையே ஒரு நேசத்தை!
ஆரம்பித்த மழைக்காலத்தின் ஈரங்களில்,
விரும்பி முளைக்கும்
ஒரு விதை போல்
வளர ஆரம்பித்திருந்தது
பெயரில்லா அந்நேசம்!
மழைக்காலத்திற்கு பிந்தைய
வறண்ட நாட்களில்
காரணங்களே சொல்லாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகொடிக்க ஆரம்பித்தாய்!...
உன் மீதான என் நேசங்களை!
சின்னஞ்சிறு ஏமாற்றங்கள்....
சில பல நிராகரிப்புகள்....
என்னிதயம்
தாங்கி கொள்ள முடியா வலிகள்...
என
என்னென்ன உன்னால் முடியுமோ...
அத்தனையும் தந்து வேரறுத்தாய்!
என்னை...
என் உணர்வுகளை...
என் கனவுகளை...
என் நேசங்களை...
அத்தனையும்!
நீ என் நெஞ்சில் தைத்த
அழகான தேவதை முள்!
அதனால் தான்
என்னால் உன்னை
எடுத்தெறிந்துவிட முடியவில்லை!...
எடுத்தெறியவும் விருப்பமில்லை!
ஆனால்...
நான் உன் செருப்பில் தைத்த
முள் போலும்!...
அலட்சியமாய்
என்னை எடுத்தெறிந்து விட்டாய்!...
உனக்கு கொஞ்சமும் வலியில்லாமல்!
உன்னிலிருந்து
பிரித்தெறியப்பட்ட
உனக்கான என் நேசம்...
கொஞ்ச காலம் துடிதுடித்து பின்
தன்னைத் தானே அழித்துக்கொண்டது!
இதோ அடுத்த மழைக்காலம்
ஆரம்பிக்க போகிறது!...
முடிவென்பதேயில்லை
என்ற கனவுகளோடு
உயிர்த்த ஒரு நேசம் முடிவுற்றது!!!
Wednesday, July 30, 2008
Tuesday, July 22, 2008
அன்பின் அர்த்தங்கள்!
அன்பின் அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை சென்று
தேடி யாசித்தாலும்
ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே
கண்ணில் தெரிகின்றன!
ஒவ்வொரு காலை துயிலெழும் போதும்
இன்றாவது வாழ வேண்டும் என்று தான்
ஆசை தோன்றுகிறது!...
ஆனால்...
அரிதாரம் பூசிய
இந்த மானிட கானகத்தில்
உண்மை மனிதத்தை
எங்கு தேடி காண்பது!?....
சுயநலம் பிடித்த
இந்த மானுட தேசத்தில் இருந்து
என்று விடைக் கிடைக்குமோ!?
சுயநல பேய்களின்
இரும்பு பிடியில் சிக்கி
பொறாமை தீயில் வெந்து
அர்த்தமிழந்து போகின்றன
அன்பின் அர்த்தங்கள்!
ஏதோ சில சமயங்களில்
மயிலிறகாய் வருட
நட்பு கைக்கோர்க்கும் போது
அங்கும் நம்பிக்கைகள்
நீர்த்துப் போகின்றன!
தனிமையில்
கொஞ்சம் வாழ்ந்து பார்க்க நினைத்தால்
அங்கு உறவு கைக்கட்டி
கேலி செய்கிறது!
மரணம் ஒன்றிலாவது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்!...
அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது
பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன்!
அது வரை நிம்மதியாய்
கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்!!!
வாழ்வின் எல்லை வரை சென்று
தேடி யாசித்தாலும்
ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே
கண்ணில் தெரிகின்றன!
ஒவ்வொரு காலை துயிலெழும் போதும்
இன்றாவது வாழ வேண்டும் என்று தான்
ஆசை தோன்றுகிறது!...
ஆனால்...
அரிதாரம் பூசிய
இந்த மானிட கானகத்தில்
உண்மை மனிதத்தை
எங்கு தேடி காண்பது!?....
சுயநலம் பிடித்த
இந்த மானுட தேசத்தில் இருந்து
என்று விடைக் கிடைக்குமோ!?
சுயநல பேய்களின்
இரும்பு பிடியில் சிக்கி
பொறாமை தீயில் வெந்து
அர்த்தமிழந்து போகின்றன
அன்பின் அர்த்தங்கள்!
ஏதோ சில சமயங்களில்
மயிலிறகாய் வருட
நட்பு கைக்கோர்க்கும் போது
அங்கும் நம்பிக்கைகள்
நீர்த்துப் போகின்றன!
தனிமையில்
கொஞ்சம் வாழ்ந்து பார்க்க நினைத்தால்
அங்கு உறவு கைக்கட்டி
கேலி செய்கிறது!
மரணம் ஒன்றிலாவது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்!...
அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது
பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன்!
அது வரை நிம்மதியாய்
கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்!!!
பிரிவு!
பார்த்து இருந்தது
பத்து நிமிடங்கள்!
மௌனமே வார்த்தையாக
பேசின நம் கண்கள்
பரிமாற மொழிகள் கிடைக்கவில்லை!...
அதற்கான அவசியமும் புரியவில்லை!
உன்னை விட்டு போக
மனம் இல்லை!
சிலையாக நிற்பதை தவிர
வேறு வழி இல்லை!
என்ன பேசுவது...
எப்படி பேசுவது...
என்ற குழப்பம்!
குழப்பத்திலே கரைந்து போனது
பத்து நிமிடம்!
பிரியா விடை பெற்று
பிரிந்து சென்றோம்!
திரும்பி திரும்பி பார்த்தபடி
போனோம்!
கால்கள் முன்னோக்கி நகர...
மனமோ பின்னோக்கி நகர...
நடந்தோம்!...
உயிர் அற்ற உடலாக...
தற்காலிக பிரிவில்
இத்தனை வருத்தமா!?...
எனக்குள்ளே அதிசயமான மாற்றமா!?...
புரியவில்லை ஒன்றும் எனக்கு!
சுழல விட்டாய்...
என்றும் உன் நினைவோடு!
சிக்கல்களை உண்டாகி விட்டாய்...
என் மனதோடு!
எப்போது பார்ப்பேன்
மறுபடி உன்னை!?...
எனக்கே அறியாமல்
தந்து விட்டேன் என்னை!!!
பத்து நிமிடங்கள்!
மௌனமே வார்த்தையாக
பேசின நம் கண்கள்
பரிமாற மொழிகள் கிடைக்கவில்லை!...
அதற்கான அவசியமும் புரியவில்லை!
உன்னை விட்டு போக
மனம் இல்லை!
சிலையாக நிற்பதை தவிர
வேறு வழி இல்லை!
என்ன பேசுவது...
எப்படி பேசுவது...
என்ற குழப்பம்!
குழப்பத்திலே கரைந்து போனது
பத்து நிமிடம்!
பிரியா விடை பெற்று
பிரிந்து சென்றோம்!
திரும்பி திரும்பி பார்த்தபடி
போனோம்!
கால்கள் முன்னோக்கி நகர...
மனமோ பின்னோக்கி நகர...
நடந்தோம்!...
உயிர் அற்ற உடலாக...
தற்காலிக பிரிவில்
இத்தனை வருத்தமா!?...
எனக்குள்ளே அதிசயமான மாற்றமா!?...
புரியவில்லை ஒன்றும் எனக்கு!
சுழல விட்டாய்...
என்றும் உன் நினைவோடு!
சிக்கல்களை உண்டாகி விட்டாய்...
என் மனதோடு!
எப்போது பார்ப்பேன்
மறுபடி உன்னை!?...
எனக்கே அறியாமல்
தந்து விட்டேன் என்னை!!!
என்னவளே!......
என்ன யோசிக்கிறாய்!?...
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா?...
ஆமாம்!...
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்!
உனக்கு தெரியுமோ தெரியாது...
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று!
ஏன் தெரியுமா!?...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை!
வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக்
கவலைப்படுவேன் என்பதால்தான்!
பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை!
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்துகொண்டிருக்கிறேன்!
இந்த உலகம் கவலைப்படுகிறது!
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்என்று...
உண்மைதான்
அதற்காக நான்அதிகம் வருத்தப்படுவதுண்டு!
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்!?...
நான் உன்னக்காய் எழுதுவதில்லை...
உன்னால்தான் எழுதுகிறேன் என்று!!!
உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்...
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்!!!
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்!
நீ என்னைக் காதலித்த
காலங்களை விட - உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்கொண்டேயிருக்கும்
பேனாவின் காலங்கள்தான் அதிகம்!
இதனால்தான் சொன்னார்களோ!?...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று!....
பேனா பாவம் பொல்லாதது தான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது!
அதனால்தான்
என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும்....உன் பெயர்
சொல்லித் துடித்துக்கொண்டிருந்தேன்!
என் கவி ரசிகைகளை விட
என் பேனா தான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது!....
ஏன் தெரியுமா!?...
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்
சேர்த்து தந்தும்
தன்னைக் காதலிக்காமல்
உன்னை மட்டும்
நான் காதலித்துக் கொண்டேயிருப்பதால்!.....
உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்து தான்
உன் பழக்கங்களை தெரிந்து கொண்டேன்!
இப்பொழுதெல்லாம்
பேனா எழுத ஆரம்பித்தால்
நான் எதுவும் பேசுவதில்லை!
பேசி பிடிவாதத்தால் வலிக்க போவது
என் கை என்பதால்!
இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும் ஒருவன்!!!!
என் பெற்றோர்களுக்கும்
எழுதப் படிக்க தெரியாது!
என்னவளே வா!....
உனக்காய் எழுதி எழுதி
என் பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ!
இல்லையேல்
என் கைகளையாவது
முறித்துவிட்டு போ!
எல்லாம்
உன் கையில் தான்
இருக்கிறது!வா!!!!!!.....
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா?...
ஆமாம்!...
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்!
உனக்கு தெரியுமோ தெரியாது...
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று!
ஏன் தெரியுமா!?...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை!
வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக்
கவலைப்படுவேன் என்பதால்தான்!
பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை!
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்துகொண்டிருக்கிறேன்!
இந்த உலகம் கவலைப்படுகிறது!
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்என்று...
உண்மைதான்
அதற்காக நான்அதிகம் வருத்தப்படுவதுண்டு!
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்!?...
நான் உன்னக்காய் எழுதுவதில்லை...
உன்னால்தான் எழுதுகிறேன் என்று!!!
உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்...
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்!!!
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்!
நீ என்னைக் காதலித்த
காலங்களை விட - உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்கொண்டேயிருக்கும்
பேனாவின் காலங்கள்தான் அதிகம்!
இதனால்தான் சொன்னார்களோ!?...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று!....
பேனா பாவம் பொல்லாதது தான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது!
அதனால்தான்
என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும்....உன் பெயர்
சொல்லித் துடித்துக்கொண்டிருந்தேன்!
என் கவி ரசிகைகளை விட
என் பேனா தான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது!....
ஏன் தெரியுமா!?...
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்
சேர்த்து தந்தும்
தன்னைக் காதலிக்காமல்
உன்னை மட்டும்
நான் காதலித்துக் கொண்டேயிருப்பதால்!.....
உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்து தான்
உன் பழக்கங்களை தெரிந்து கொண்டேன்!
இப்பொழுதெல்லாம்
பேனா எழுத ஆரம்பித்தால்
நான் எதுவும் பேசுவதில்லை!
பேசி பிடிவாதத்தால் வலிக்க போவது
என் கை என்பதால்!
இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும் ஒருவன்!!!!
என் பெற்றோர்களுக்கும்
எழுதப் படிக்க தெரியாது!
என்னவளே வா!....
உனக்காய் எழுதி எழுதி
என் பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ!
இல்லையேல்
என் கைகளையாவது
முறித்துவிட்டு போ!
எல்லாம்
உன் கையில் தான்
இருக்கிறது!வா!!!!!!.....
காதல்...!
உன் நினைவே பொக்கிஷம்!

உனது “மறந்து விடு!” என்ற
ஒரு வார்த்தையை மட்டும்
ஏனோ கேட்க மறுக்கிறது
என் மனது!…
ஒரு வேளை
நீ எதை சொன்னாலும் கேட்கும் மனது,
உனது இந்த வார்த்தையையும் கேட்டு விட்டால்…
இப்படி எல்லாம்
அவஸ்தைப் படத் தேவையில்லை தான்!…
ஆனால்...
பாவி மனசுக்கு அது தெரியவில்லையே!...…
அடம் பிடிக்கிறது...
“மறப்பேனா உன்னை!?” என்று...
எத்தனை முறை தான் சொல்லுவது!!??...
வார்த்தைகள் கத்தியாகி,
உள்ளத்தைக் கிழித்து,
காயப் படுத்தி,
ரணமாக்கிய போதும்
உனது நினைவுகள்
பொக்கிஷமாய்த் தான்
பொத்தி வைக்கப் படுகின்றன…
என் மனதினுள்ளே!!!...
உனது நினைவுகளில் தான்....
உன் காதல் பொய்யாக இருக்கலாம்!...
நீ சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருக்கலாம்!...
உனது நேசம் வேஷமாக இருக்கலாம்!...
ஆனால்...
நான் உன் மீது கொண்ட காதல் நிஜம்!
உன்னையே உயிராய் நினைத்தது நிஜம்!
உனக்காக உறவுகளை வெறுத்தது நிஜம்!
உண்மைக் காதல் பிரியாது என்பார்கள்
நான் உன் மீது கொண்டது
உண்மையான காதல் தானே!?...
பின் எப்படி எனை நீ பிரிந்தாய்!!??......
"காதலித்துப் பார்!...
கவிதை வரும்!"
என்று வைரமுத்து சொன்னார்!
ஏனோ உனது பிரிவில் தான்
கவிதை வருகிறது எனக்கு!!!
உன் பார்வையில்
பூத்துக் குலுங்கிய நான்...
உன் பிரிவில்
சருகாகிப் போனேன்!
உனது நினைவுகளில் தான்
என் இதயம் இன்னமும்
துடித்து கொண்டிருக்கிறது!
மறந்து விடச் சொல்லாதே!...
இறந்து விடுவேன் நான்!!!
நீ சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருக்கலாம்!...
உனது நேசம் வேஷமாக இருக்கலாம்!...
ஆனால்...
நான் உன் மீது கொண்ட காதல் நிஜம்!
உன்னையே உயிராய் நினைத்தது நிஜம்!
உனக்காக உறவுகளை வெறுத்தது நிஜம்!
உண்மைக் காதல் பிரியாது என்பார்கள்
நான் உன் மீது கொண்டது
உண்மையான காதல் தானே!?...
பின் எப்படி எனை நீ பிரிந்தாய்!!??......
"காதலித்துப் பார்!...
கவிதை வரும்!"
என்று வைரமுத்து சொன்னார்!
ஏனோ உனது பிரிவில் தான்
கவிதை வருகிறது எனக்கு!!!
உன் பார்வையில்
பூத்துக் குலுங்கிய நான்...
உன் பிரிவில்
சருகாகிப் போனேன்!
உனது நினைவுகளில் தான்
என் இதயம் இன்னமும்
துடித்து கொண்டிருக்கிறது!
மறந்து விடச் சொல்லாதே!...
இறந்து விடுவேன் நான்!!!
சொல்லி விடு!
உனக்கு என் கவிதைகளின்
அர்த்தம் தான் புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!...
ஆனால்
இப்போது தான் தெரிகிறது
உனக்கு புரியாதது
என் கவிதைகள் மட்டுமல்ல
என் காதலும் தான் என்று!
பெண்ணின் மனம் தான் ஆழம் என்பார்கள்!...
உன் மனம் கூட ஆழம் தானடா!
காதலெனும் முத்தை
உன் மனமெனும் கடலிலிருந்து
எடுக்க முடியவில்லையே என்னால்!!!
நீ முறைக்கும் போதும்
அழகாய்த் தெரிகிறாய்!
திட்டும் போதும்
இதமாய் இருக்கிறது!
அன்று திட்டினாயே...
"பைத்தியம்!" என்று...
உண்மை தான்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
பைத்தியம் தான் நான்!!!
என் மனது
இன்னமுமா உனக்குப் புரியவில்லை!?
அல்லது புரிந்தும் நடிக்கிறாயா???
உன் நடிப்பைத் தாங்கும் சக்தி
இனி மேலும் எனக்கு இல்லை அன்பே!
ஒரு முறை...
ஒரே ஒரு முறை...
உன் இதழ் திறந்து சொல்லி விடு!
நீ என்னை நேசிப்பதாய் அல்ல.....
நீ என்னை நேசிக்கவில்லை என்றாவது!...
முடிவு தெரியாமல்
தடுமாறும் கதையாய்
என் கதையும் ஆவதில்
எனக்கு விருப்பம் இல்லையடா!!!
அர்த்தம் தான் புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!...
ஆனால்
இப்போது தான் தெரிகிறது
உனக்கு புரியாதது
என் கவிதைகள் மட்டுமல்ல
என் காதலும் தான் என்று!
பெண்ணின் மனம் தான் ஆழம் என்பார்கள்!...
உன் மனம் கூட ஆழம் தானடா!
காதலெனும் முத்தை
உன் மனமெனும் கடலிலிருந்து
எடுக்க முடியவில்லையே என்னால்!!!
நீ முறைக்கும் போதும்
அழகாய்த் தெரிகிறாய்!
திட்டும் போதும்
இதமாய் இருக்கிறது!
அன்று திட்டினாயே...
"பைத்தியம்!" என்று...
உண்மை தான்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
பைத்தியம் தான் நான்!!!
என் மனது
இன்னமுமா உனக்குப் புரியவில்லை!?
அல்லது புரிந்தும் நடிக்கிறாயா???
உன் நடிப்பைத் தாங்கும் சக்தி
இனி மேலும் எனக்கு இல்லை அன்பே!
ஒரு முறை...
ஒரே ஒரு முறை...
உன் இதழ் திறந்து சொல்லி விடு!
நீ என்னை நேசிப்பதாய் அல்ல.....
நீ என்னை நேசிக்கவில்லை என்றாவது!...
முடிவு தெரியாமல்
தடுமாறும் கதையாய்
என் கதையும் ஆவதில்
எனக்கு விருப்பம் இல்லையடா!!!
வலிக்கிறது!
எனக்கு ஏமாற்றம்
உன்னால் மட்டும் தான் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்!...
ம்....
இதில் கூட
என் கணிப்பு தவறிப் போனது!
எதிரினில் நின்றால்
உன்னையே காட்டும்
கண்ணாடி!...
உன்னைத் தவிர
எதையும் எழுதத் தெரியாத
என் பேனா!...
கனவுகளை மட்டும்
பொத்தி வைக்கும்
இதயம்!...
வதைக்கும் நினைவுகளை
மீண்டும் மீண்டும் அசை போடும்
மனது!...
நீ மறுத்த போது வலித்ததை விட
அதிகமாய் வலிக்கிறதுடா!
காதலித்தால்
கையெழுத்து அழகாகும்
என்பதென்னவோ உண்மை தான்!...
ஆனால்
தலையெழுத்து தான்
சிதைந்து போகும்!!!
இருந்தாலும்
எனக்கொரு சந்தேகம்!...
என் தலையெழுத்து
சிதைந்து மட்டும் தான் போனதா!?...
இல்லை ஒரேயடியாக
அழிந்தே போய் விட்டதா!!!???...
இதயத்தினுள் பறந்த
ஆயிரம் பட்டாம் பூச்சிகளையும்
உன் ஒரே வார்த்தையில்
பொசுக்கி விட்டாயே!...
புன்னகைகளை எனக்குப்
பரிசளித்த நீயே
என் இன்பங்களைப்
பறித்துக் கொண்டாயே!....
இது எந்த விதத்தில் நியாயம்????
சொல் அன்பே!!!???.......
உன்னால் மட்டும் தான் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்!...
ம்....
இதில் கூட
என் கணிப்பு தவறிப் போனது!
எதிரினில் நின்றால்
உன்னையே காட்டும்
கண்ணாடி!...
உன்னைத் தவிர
எதையும் எழுதத் தெரியாத
என் பேனா!...
கனவுகளை மட்டும்
பொத்தி வைக்கும்
இதயம்!...
வதைக்கும் நினைவுகளை
மீண்டும் மீண்டும் அசை போடும்
மனது!...
நீ மறுத்த போது வலித்ததை விட
அதிகமாய் வலிக்கிறதுடா!
காதலித்தால்
கையெழுத்து அழகாகும்
என்பதென்னவோ உண்மை தான்!...
ஆனால்
தலையெழுத்து தான்
சிதைந்து போகும்!!!
இருந்தாலும்
எனக்கொரு சந்தேகம்!...
என் தலையெழுத்து
சிதைந்து மட்டும் தான் போனதா!?...
இல்லை ஒரேயடியாக
அழிந்தே போய் விட்டதா!!!???...
இதயத்தினுள் பறந்த
ஆயிரம் பட்டாம் பூச்சிகளையும்
உன் ஒரே வார்த்தையில்
பொசுக்கி விட்டாயே!...
புன்னகைகளை எனக்குப்
பரிசளித்த நீயே
என் இன்பங்களைப்
பறித்துக் கொண்டாயே!....
இது எந்த விதத்தில் நியாயம்????
சொல் அன்பே!!!???.......
Friday, July 11, 2008
உயிரே!
உன் பார்வையில்
துடித்த இதயத்தை
ஒரே வார்த்தையில்
நிறுத்தி விட்டாய்!
ஒரே நாளில்
தோற்றுப் போனேன்...
என் வாழ்க்கையை!!!
இறந்து விடத் தான் தோன்றியது!
ஏனோ முடியவில்லை
என் முச்சு நின்று விட்டால்
என்னுள் இருக்கும் நீ
எதை சுவாசிப்பாய் என்ற
தயக்கம் தான் காரணம்!
உன் ஒவ்வொரு புன்னகைகளாய்
சேர்த்து கட்டிய
என் காதல் மாளிகையை
ஒரே ஒரு வார்த்தையில்
நொறுக்கி விட்டாய்!
உனக்கு ஒன்று தெரியுமா!?....
இது வரை நான் எழுதிய
கவிதைகள் அனைத்தும்
என் கற்பனை மட்டும் தான்!
ஆனால்
இந்த கவிதை மட்டும்
உணர்ந்து...
என் உணர்வுகளை பிழிந்து
எழுதியது!
முதல் முதலாய்
வலிகளின் ஆழத்தையும்
வேதனைகளின் வேகத்தையும்
அறிந்து கொண்டேன்...
உன்னால்!
அதற்காக உனக்கு என் நன்றிகள்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
என் மனதிற்கு
இப்போதெல்லாம்
என்ன செய்வது
என்றே தெரியவில்லை....
நண்பனாய் தான்
என் வாழ்வில் வந்தாய்!
எப்போது உன்னிடம்
என்னைத் தொலைத்தேனோ...
இன்று வரை தெரியாது!
மன்னித்து கொள்!
நண்பனிடம் காதல் வளர்த்தது
தப்பு தான்!...
அதற்காக இவ்வளவு
பெரிய தண்டனையை எல்லாம்
என்னால் தாங்க முடியாதுடா!...
சின்னதாய் கத்தி வெட்டினாலே
துடித்து போய் விடுவேன் நான்.....
ஆனால் இப்போது
வார்த்தை அம்புகளால்
என் இதயத்தை சிதைக்கிறாய்!.....
உயிரே!
நிஜமாய் வலிக்கிறது....
துடித்த இதயத்தை
ஒரே வார்த்தையில்
நிறுத்தி விட்டாய்!
ஒரே நாளில்
தோற்றுப் போனேன்...
என் வாழ்க்கையை!!!
இறந்து விடத் தான் தோன்றியது!
ஏனோ முடியவில்லை
என் முச்சு நின்று விட்டால்
என்னுள் இருக்கும் நீ
எதை சுவாசிப்பாய் என்ற
தயக்கம் தான் காரணம்!
உன் ஒவ்வொரு புன்னகைகளாய்
சேர்த்து கட்டிய
என் காதல் மாளிகையை
ஒரே ஒரு வார்த்தையில்
நொறுக்கி விட்டாய்!
உனக்கு ஒன்று தெரியுமா!?....
இது வரை நான் எழுதிய
கவிதைகள் அனைத்தும்
என் கற்பனை மட்டும் தான்!
ஆனால்
இந்த கவிதை மட்டும்
உணர்ந்து...
என் உணர்வுகளை பிழிந்து
எழுதியது!
முதல் முதலாய்
வலிகளின் ஆழத்தையும்
வேதனைகளின் வேகத்தையும்
அறிந்து கொண்டேன்...
உன்னால்!
அதற்காக உனக்கு என் நன்றிகள்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
என் மனதிற்கு
இப்போதெல்லாம்
என்ன செய்வது
என்றே தெரியவில்லை....
நண்பனாய் தான்
என் வாழ்வில் வந்தாய்!
எப்போது உன்னிடம்
என்னைத் தொலைத்தேனோ...
இன்று வரை தெரியாது!
மன்னித்து கொள்!
நண்பனிடம் காதல் வளர்த்தது
தப்பு தான்!...
அதற்காக இவ்வளவு
பெரிய தண்டனையை எல்லாம்
என்னால் தாங்க முடியாதுடா!...
சின்னதாய் கத்தி வெட்டினாலே
துடித்து போய் விடுவேன் நான்.....
ஆனால் இப்போது
வார்த்தை அம்புகளால்
என் இதயத்தை சிதைக்கிறாய்!.....
உயிரே!
நிஜமாய் வலிக்கிறது....
Subscribe to:
Comments (Atom)
