உன் பார்வையில்
துடித்த இதயத்தை
ஒரே வார்த்தையில்
நிறுத்தி விட்டாய்!
ஒரே நாளில்
தோற்றுப் போனேன்...
என் வாழ்க்கையை!!!
இறந்து விடத் தான் தோன்றியது!
ஏனோ முடியவில்லை
என் முச்சு நின்று விட்டால்
என்னுள் இருக்கும் நீ
எதை சுவாசிப்பாய் என்ற
தயக்கம் தான் காரணம்!
உன் ஒவ்வொரு புன்னகைகளாய்
சேர்த்து கட்டிய
என் காதல் மாளிகையை
ஒரே ஒரு வார்த்தையில்
நொறுக்கி விட்டாய்!
உனக்கு ஒன்று தெரியுமா!?....
இது வரை நான் எழுதிய
கவிதைகள் அனைத்தும்
என் கற்பனை மட்டும் தான்!
ஆனால்
இந்த கவிதை மட்டும்
உணர்ந்து...
என் உணர்வுகளை பிழிந்து
எழுதியது!
முதல் முதலாய்
வலிகளின் ஆழத்தையும்
வேதனைகளின் வேகத்தையும்
அறிந்து கொண்டேன்...
உன்னால்!
அதற்காக உனக்கு என் நன்றிகள்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
என் மனதிற்கு
இப்போதெல்லாம்
என்ன செய்வது
என்றே தெரியவில்லை....
நண்பனாய் தான்
என் வாழ்வில் வந்தாய்!
எப்போது உன்னிடம்
என்னைத் தொலைத்தேனோ...
இன்று வரை தெரியாது!
மன்னித்து கொள்!
நண்பனிடம் காதல் வளர்த்தது
தப்பு தான்!...
அதற்காக இவ்வளவு
பெரிய தண்டனையை எல்லாம்
என்னால் தாங்க முடியாதுடா!...
சின்னதாய் கத்தி வெட்டினாலே
துடித்து போய் விடுவேன் நான்.....
ஆனால் இப்போது
வார்த்தை அம்புகளால்
என் இதயத்தை சிதைக்கிறாய்!.....
உயிரே!
நிஜமாய் வலிக்கிறது....
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment