உனக்கு என் கவிதைகளின்
அர்த்தம் தான் புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!...
ஆனால்
இப்போது தான் தெரிகிறது
உனக்கு புரியாதது
என் கவிதைகள் மட்டுமல்ல
என் காதலும் தான் என்று!
பெண்ணின் மனம் தான் ஆழம் என்பார்கள்!...
உன் மனம் கூட ஆழம் தானடா!
காதலெனும் முத்தை
உன் மனமெனும் கடலிலிருந்து
எடுக்க முடியவில்லையே என்னால்!!!
நீ முறைக்கும் போதும்
அழகாய்த் தெரிகிறாய்!
திட்டும் போதும்
இதமாய் இருக்கிறது!
அன்று திட்டினாயே...
"பைத்தியம்!" என்று...
உண்மை தான்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
பைத்தியம் தான் நான்!!!
என் மனது
இன்னமுமா உனக்குப் புரியவில்லை!?
அல்லது புரிந்தும் நடிக்கிறாயா???
உன் நடிப்பைத் தாங்கும் சக்தி
இனி மேலும் எனக்கு இல்லை அன்பே!
ஒரு முறை...
ஒரே ஒரு முறை...
உன் இதழ் திறந்து சொல்லி விடு!
நீ என்னை நேசிப்பதாய் அல்ல.....
நீ என்னை நேசிக்கவில்லை என்றாவது!...
முடிவு தெரியாமல்
தடுமாறும் கதையாய்
என் கதையும் ஆவதில்
எனக்கு விருப்பம் இல்லையடா!!!
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment