
உனது “மறந்து விடு!” என்ற
ஒரு வார்த்தையை மட்டும்
ஏனோ கேட்க மறுக்கிறது
என் மனது!…
ஒரு வேளை
நீ எதை சொன்னாலும் கேட்கும் மனது,
உனது இந்த வார்த்தையையும் கேட்டு விட்டால்…
இப்படி எல்லாம்
அவஸ்தைப் படத் தேவையில்லை தான்!…
ஆனால்...
பாவி மனசுக்கு அது தெரியவில்லையே!...…
அடம் பிடிக்கிறது...
“மறப்பேனா உன்னை!?” என்று...
எத்தனை முறை தான் சொல்லுவது!!??...
வார்த்தைகள் கத்தியாகி,
உள்ளத்தைக் கிழித்து,
காயப் படுத்தி,
ரணமாக்கிய போதும்
உனது நினைவுகள்
பொக்கிஷமாய்த் தான்
பொத்தி வைக்கப் படுகின்றன…
என் மனதினுள்ளே!!!...
No comments:
Post a Comment