என்ன யோசிக்கிறாய்!?...
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா?...
ஆமாம்!...
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்!
உனக்கு தெரியுமோ தெரியாது...
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று!
ஏன் தெரியுமா!?...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை!
வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக்
கவலைப்படுவேன் என்பதால்தான்!
பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை!
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்துகொண்டிருக்கிறேன்!
இந்த உலகம் கவலைப்படுகிறது!
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்என்று...
உண்மைதான்
அதற்காக நான்அதிகம் வருத்தப்படுவதுண்டு!
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்!?...
நான் உன்னக்காய் எழுதுவதில்லை...
உன்னால்தான் எழுதுகிறேன் என்று!!!
உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்...
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்!!!
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்!
நீ என்னைக் காதலித்த
காலங்களை விட - உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்கொண்டேயிருக்கும்
பேனாவின் காலங்கள்தான் அதிகம்!
இதனால்தான் சொன்னார்களோ!?...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று!....
பேனா பாவம் பொல்லாதது தான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது!
அதனால்தான்
என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும்....உன் பெயர்
சொல்லித் துடித்துக்கொண்டிருந்தேன்!
என் கவி ரசிகைகளை விட
என் பேனா தான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது!....
ஏன் தெரியுமா!?...
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்
சேர்த்து தந்தும்
தன்னைக் காதலிக்காமல்
உன்னை மட்டும்
நான் காதலித்துக் கொண்டேயிருப்பதால்!.....
உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்து தான்
உன் பழக்கங்களை தெரிந்து கொண்டேன்!
இப்பொழுதெல்லாம்
பேனா எழுத ஆரம்பித்தால்
நான் எதுவும் பேசுவதில்லை!
பேசி பிடிவாதத்தால் வலிக்க போவது
என் கை என்பதால்!
இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும் ஒருவன்!!!!
என் பெற்றோர்களுக்கும்
எழுதப் படிக்க தெரியாது!
என்னவளே வா!....
உனக்காய் எழுதி எழுதி
என் பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ!
இல்லையேல்
என் கைகளையாவது
முறித்துவிட்டு போ!
எல்லாம்
உன் கையில் தான்
இருக்கிறது!வா!!!!!!.....
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment