Tuesday, July 22, 2008

வலிக்கிறது!

எனக்கு ஏமாற்றம்
உன்னால் மட்டும் தான் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்!...
ம்....
இதில் கூட
என் கணிப்பு தவறிப் போனது!

எதிரினில் நின்றால்
உன்னையே காட்டும்
கண்ணாடி!...

உன்னைத் தவிர
எதையும் எழுதத் தெரியாத
என் பேனா!...

கனவுகளை மட்டும்
பொத்தி வைக்கும்
இதயம்!...

வதைக்கும் நினைவுகளை
மீண்டும் மீண்டும் அசை போடும்
மனது!...

நீ மறுத்த போது வலித்ததை விட
அதிகமாய் வலிக்கிறதுடா!

காதலித்தால்
கையெழுத்து அழகாகும்
என்பதென்னவோ உண்மை தான்!...
ஆனால்
தலையெழுத்து தான்
சிதைந்து போகும்!!!

இருந்தாலும்
எனக்கொரு சந்தேகம்!...
என் தலையெழுத்து
சிதைந்து மட்டும் தான் போனதா!?...
இல்லை ஒரேயடியாக
அழிந்தே போய் விட்டதா!!!???...

இதயத்தினுள் பறந்த
ஆயிரம் பட்டாம் பூச்சிகளையும்
உன் ஒரே வார்த்தையில்
பொசுக்கி விட்டாயே!...

புன்னகைகளை எனக்குப்
பரிசளித்த நீயே
என் இன்பங்களைப்
பறித்துக் கொண்டாயே!....
இது எந்த விதத்தில் நியாயம்????
சொல் அன்பே!!!???.......

No comments: