அன்பின் அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை சென்று
தேடி யாசித்தாலும்
ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே
கண்ணில் தெரிகின்றன!
ஒவ்வொரு காலை துயிலெழும் போதும்
இன்றாவது வாழ வேண்டும் என்று தான்
ஆசை தோன்றுகிறது!...
ஆனால்...
அரிதாரம் பூசிய
இந்த மானிட கானகத்தில்
உண்மை மனிதத்தை
எங்கு தேடி காண்பது!?....
சுயநலம் பிடித்த
இந்த மானுட தேசத்தில் இருந்து
என்று விடைக் கிடைக்குமோ!?
சுயநல பேய்களின்
இரும்பு பிடியில் சிக்கி
பொறாமை தீயில் வெந்து
அர்த்தமிழந்து போகின்றன
அன்பின் அர்த்தங்கள்!
ஏதோ சில சமயங்களில்
மயிலிறகாய் வருட
நட்பு கைக்கோர்க்கும் போது
அங்கும் நம்பிக்கைகள்
நீர்த்துப் போகின்றன!
தனிமையில்
கொஞ்சம் வாழ்ந்து பார்க்க நினைத்தால்
அங்கு உறவு கைக்கட்டி
கேலி செய்கிறது!
மரணம் ஒன்றிலாவது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்!...
அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது
பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன்!
அது வரை நிம்மதியாய்
கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்!!!
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment