பார்த்து இருந்தது
பத்து நிமிடங்கள்!
மௌனமே வார்த்தையாக
பேசின நம் கண்கள்
பரிமாற மொழிகள் கிடைக்கவில்லை!...
அதற்கான அவசியமும் புரியவில்லை!
உன்னை விட்டு போக
மனம் இல்லை!
சிலையாக நிற்பதை தவிர
வேறு வழி இல்லை!
என்ன பேசுவது...
எப்படி பேசுவது...
என்ற குழப்பம்!
குழப்பத்திலே கரைந்து போனது
பத்து நிமிடம்!
பிரியா விடை பெற்று
பிரிந்து சென்றோம்!
திரும்பி திரும்பி பார்த்தபடி
போனோம்!
கால்கள் முன்னோக்கி நகர...
மனமோ பின்னோக்கி நகர...
நடந்தோம்!...
உயிர் அற்ற உடலாக...
தற்காலிக பிரிவில்
இத்தனை வருத்தமா!?...
எனக்குள்ளே அதிசயமான மாற்றமா!?...
புரியவில்லை ஒன்றும் எனக்கு!
சுழல விட்டாய்...
என்றும் உன் நினைவோடு!
சிக்கல்களை உண்டாகி விட்டாய்...
என் மனதோடு!
எப்போது பார்ப்பேன்
மறுபடி உன்னை!?...
எனக்கே அறியாமல்
தந்து விட்டேன் என்னை!!!
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment