உன் காதல் பொய்யாக இருக்கலாம்!...
நீ சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருக்கலாம்!...
உனது நேசம் வேஷமாக இருக்கலாம்!...
ஆனால்...
நான் உன் மீது கொண்ட காதல் நிஜம்!
உன்னையே உயிராய் நினைத்தது நிஜம்!
உனக்காக உறவுகளை வெறுத்தது நிஜம்!
உண்மைக் காதல் பிரியாது என்பார்கள்
நான் உன் மீது கொண்டது
உண்மையான காதல் தானே!?...
பின் எப்படி எனை நீ பிரிந்தாய்!!??......
"காதலித்துப் பார்!...
கவிதை வரும்!"
என்று வைரமுத்து சொன்னார்!
ஏனோ உனது பிரிவில் தான்
கவிதை வருகிறது எனக்கு!!!
உன் பார்வையில்
பூத்துக் குலுங்கிய நான்...
உன் பிரிவில்
சருகாகிப் போனேன்!
உனது நினைவுகளில் தான்
என் இதயம் இன்னமும்
துடித்து கொண்டிருக்கிறது!
மறந்து விடச் சொல்லாதே!...
இறந்து விடுவேன் நான்!!!
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment